Followers

பனிமழை பொழிந்திடும் பொழுதொன்றையொத்தகுளிர்ந்த கானமொன்றை இசைத்தபடிநீயனுப்பிய செய்தியினைக் காண்கிறேன், தேவதை விரல்களின் மந்திரக்கோல்ஆகாயத்திலிருந்துமயில்நீல வண்ணத்தை மட்டும் காத்திருந்து பெற்று வெண்பஞ்சு மேகங்களில் எழுதியனுப்பியது போலஎன் கைகளில் எடையின்றிக் கனக்கும் அச் சுபசெய்திஇரவுகளிலும் எனது வாழ்வின் அத்தனை இருள்களிலும் பல ஒளி மின்னல்களாக ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சுகையில்நரம்புகளில் இனிமையாய் அதிர்கிறது

ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்
செழிக்கிறேன் நானும்








மெல்லிய நீர்த்துளிகள்


இசை சேர்த்து வந்து

மேனி முழுதும் தெளிக்கின்றன

நீண்ட காலங்களாக

சேகரித்து வைத்த அன்பை

அமானுஷ்ய ஈரத்தோடு

தளிர் விட்டிருக்கும் அகத்தி

பெண் நெற்றிப் பொட்டு வடிவ

பச்சை நீளிலை மரத்தில்

ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்

ஏழெட்டுக் கிளிகள்

செந்நிறச் சொண்டுகளுடன்

மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி

மழையும்

நதியின் ஈரலிப்பும்

குளிரின் வாசனையும்

இதே பசுமையும் என்றுமிருக்கும்

No comments: